குடியரசு தலைவர் நலமாக உள்ளார் – எய்ம்ஸ் மருத்துவமனை !

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சு வலி காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பிறகு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, இன்று இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.

தற்போது வந்த செய்தி அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் சிகிச்சைக்கு பிறகு ராம்நாத் கோவிந்த் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.