தலைவர் நல்லகண்ணுவுக்கு கரோனா தொற்று !

கரோனா தொற்றின் பரவல் மீண்டும் பரவ தொடங்கிய நிலையில் தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியல் தலைவர்களுக்கும் பரவ தொடங்கி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களான சந்தோஷ் பாபு, பொன்ராஜ், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்லேறு அரசியல் பிரமுகர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று வரை அவர் பரப்புரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.