ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக, ஆ.ராசா இன்று மாலை 6 மணிக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனது பேச்சு முதலமைச்சரை காயப்படுத்தியதாக கருதினால், மன்னிப்பு கோருவதாக ஆ.ராசா தெரிவித்திருந்தார். இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து பெற்றப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம், ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், அவரின் பேச்சு தேர்தல் நடத்தை விதியை மீறியது போன்று உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இன்று மாலை 6 மணிக்குள் ராசா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில், மேற்கொண்டு எந்தவொரு ஆதாரங்களையும் பெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.