தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் சிவன் காலமானார் !

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் சந்தோஷ் சிவன். இவர் ‘தளபதி’, ‘ரோஜா’, உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இவரது தந்தை சிவன். இவர் மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர்.புகைப்படக் கலைஞராக சினிமாவில் அறிமுகமான சிவன், மூன்று முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 

நேற்று சிவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் சிவன் காலமானார்.இவரது இறப்பிற்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.