மக்களுக்கு ஒரு நற்செய்தி.. நாளை முதல் சென்னை புறநகர் ரயில் சேவை தொடக்கம் !

கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில், சென்னை புறநகர் ரயில்களில் மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதி இருந்தது.

தற்போது சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில்களில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணிக்கலாம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதில் பெண்கள், பெண்களுடன் பயணிக்கக்கூடிய 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் எனவும், ஆண்கள் ‘பீக் ஹவர்ஸ்’ எனப்படும் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், மற்றும் இரவு 7 மணி முதல் கடைசி நேரம் வரையிலும் பயணிக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.