தேசிய விருது பெற்ற நடிகர் நெடுமுடி வேணு காலமானார் !

தேசிய விருது பெற்ற நடிகர் நெடுமுடி வேணு தனது 73 வது வயதில் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.மேலும் அவருக்கு கல்லீரல் தொடர்பான கோளாறுகள் இருந்துள்ளது.

நெடுமுடி வேணு நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் காவலம் நாராயணப் பணிக்கர். 1978 ல் ஜி அரவிந்தன் இயக்கிய தம்பு படத்தின் மூலம் அவர் அறிமுகமானார்.

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் அவர் மூன்று தேசிய மற்றும் ஆறு மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

தமிழில் இந்தியன் மற்றும் சமீபத்தில் வெளியான சர்வம் தாளமயம் போன்ற படங்களில் நடித்திருப்பார்.

இதையும் படிங்க : தினமும் 3 மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்படும்