நவம்பர் 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு !

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.

கர்நாடகா,பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.மேலும் தமிழகத்திலும் செப் 1 முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

மேலும் நவம்பர் 1 ம் தேதி முதல் ஒன்று முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.மேலும் பள்ளிகளை திறக்க இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்ய பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பள்ளிகளை தூய்மை படுத்துதல் வகுப்பறைகள் , தலைமை ஆசிரியர் அறை , சமையலறை மற்றும் கழிப்பறைகள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தேசிய விருது பெற்ற நடிகர் நெடுமுடி வேணு காலமானார் !