மீண்டும் மீண்டும் அரங்கேறும் கொடூரம்..பாம்பை விட்டு மனைவியை கொலை செய்த கணவன் !

என்னதான் சட்டங்கள் கடுமையாக வந்தாலும் மீண்டும் மீண்டும் அவலம் நடந்துகொண்டே தான் இருக்கிறது.அந்த வகையில்,கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர் சூரஜ் என்பவர் தன் மனைவியை வித்தியாசமான முறையில் கொலை செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. திருமணத்தின் போது உத்ராவின் பெற்றோர் 784 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு கார் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இந்நிலையில்,கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.முதலில் உத்தரவிற்கு கணவன் வீட்டில் இருக்கும் போது பாம்பு கடித்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.தீவிர சிகிச்சையில் இருந்த அவர் பின்பு குணமைடைந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்து வந்தார்.

ஆனால் சில நாட்களுக்கு பின்பு பெற்றோர் வீட்டில் படுக்கையறையில் பிணமாகக் கிடந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பாம்பு கடித்து இறந்துள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரவில் பெற்றோர்கள் மகள் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் சூரஜை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளார்.இதில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது.

அந்த விசாரணை முடிவில் கணவன் சூரஜ் தன் மனைவியை கொள்வதற்காக இரண்டு முறை பாம்பை தன் மனைவி இருக்கும் அறையில் வைத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.மேலும் சூரஜ் குற்றவாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தண்டனையின் விவரம் வரும் புதன்கிழமை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : நவம்பர் 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு !