இன்றைய பங்குசந்தையில் என்எஸ்இ நிஃப்டி முதல் முறையாக 17900 க்கு மேல் முடிவடைந்தது.பிஎஸ்இ சென்செக்ஸ் 77 புள்ளிகள் அல்லது 0.13 சதவீதம் உயர்ந்து 60,136 இல் முடிவடைந்தது, அதே நேரத்தில் என்எஸ்இ நிஃப்டி 50 புள்ளிகள் அல்லது 0.3 சதவீதம் உயர்ந்து 17,945 ஆக முடிந்தது.
இன்றைய பங்குச்சந்தை முடிவில்,மாருதி சுசுகி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஐடிசி, என்டிபிசி, பாரத ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), கோடக் வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை உயர்வை சந்தித்தன.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), டெக் மஹிந்திரா, இன்போசிஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்), பார்தி ஏர்டெல் ஆகியவை குறைந்து காணப்பட்டன.
நிஃப்டி ஆட்டோ 2.7 சதவீதமும், வங்கி நிஃப்டி 1.37 சதவீதமும் அதிகரித்தன.
இதையும் படிங்க : மீண்டும் மீண்டும் அரங்கேறும் கொடூரம்..பாம்பை விட்டு மனைவியை கொலை செய்த கணவன் !