மது பிரியர்களுக்கு செக்..2 டோஸ் தடுப்பூசி போட்டால் தான் சரக்கு !

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மெகா தடுப்பூசி முகாம்களில் அதிக அளவில் மக்கள் தடுப்பூசி போட்டுவருகின்றன.

தற்போது 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் கடைகள் முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள பல விழிப்புணர்வுகள் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.மெகா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் நாமக்கல்லில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்றும் அம்மாவட்ட நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : மீண்டும் மீண்டும் அரங்கேறும் கொடூரம்..பாம்பை விட்டு மனைவியை கொலை செய்த கணவன் !