பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் !

சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள்
சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் பண்டிகை காலங்கள் வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றன.இந்த மாதம் 14-ம் தேதி ஆயுத பூஜை, 15-ம் தேதி விஜயதசமி விடுமுறை நாட்களாகும். மேலும் வரும் 16-ம் தேதியும், 17-ம் தேதியும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாகும்.

இந்த தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சொந்த ஊருக்கு செல்ல பயணப்படுவர்.மேலும் தீபாவளி பண்டிகை கொண்டாட மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் அதற்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,506 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் பண்டிகைக்காக சென்னையில் இருந்து 9,806 பேருந்துகள், பிற ஊர்களில் இருந்து 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16,540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆயுத பூஜையை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க : மது பிரியர்களுக்கு செக்..2 டோஸ் தடுப்பூசி போட்டால் தான் சரக்கு !