வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைபூச திருவிழா இன்று தொடங்கியது..!

வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைபூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளது.

முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திரு அறையில் உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும்.

அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும் தைப்பூச திருவிழா வையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களும், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் இந்த ஆண்டு அந்த கலை நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளது. தைப்பூச விழாவை யொட்டி வடலூர் பகுதிகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் அமைக்கப்படவில்லை.