இளநரையா இனி கவலை வேண்டாம் இதோ சில டிப்ஸ் !

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலும் இளவயதினருக்கு தலைமுடி நரைத்துவிடுகிறது.அதற்கு காரணம் இப்போது இருக்கும் சூழல் ,உணவு ,வேலை என நிறைய காரணங்கள் வந்துவிட்டது.இதற்கான சில டிப்ஸ் .

நல்லெண்ணனை சிறிதளவு இத்துடன் நெல்லிக்காய் சாற்றை கலந்து மிதமாக சூடாக்கி கொள்ளவும்.இதை தலையில் தேய்த்து வர இளமையில் வரும் நரையை தடுக்கலாம்.மேலும் இது தலைமுடிக்கு நல்ல கருமையான நிறத்தை கொடுக்கிறது.

தேங்காய் எண்ணையில் மூங்கில் இலைகளை போட்டு 10 நாட்கள் ஊறவைக்க வேண்டும் பின்னர் அந்த எண்ணையை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் இளநரையை தடுக்கலாம்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் திரிபலா நீரை பருகி வந்தால் இளநரையை கட்டுப்படுத்தும்.உணவில் அதிகளவு கருவேப்பில்லை சாப்பிட்டு வந்தால் முடி நன்றாக கருமையான நிறத்தில் இருக்கும் .