அ.தி.மு.க கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது- ஜி.கே. வாசன்

சசிகலா விடுதலையால் அ.தி.மு.க வெற்றி பாதிக்காது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது. ராகுல் காந்தி கொங்கு மண்டலத்தில் பிரச்சாரம் செய்தார். அவர் கண்மூடித்தனமாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார். யார் பிரச்சாரம் செய்ய வந்தாலும் மக்கள் கூட்டம் கூடத்தான் செய்யும்.

வேளாண் சட்டங்களை கொண்டு வந்த நோக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வளர்ச்சியையும் உறுதிசெய்ய வேண்டும் என்பதற்காகத்தான் எனவும் தெரிவித்துள்ளார்.