மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போட தமிழக அரசு நடவடிக்கை !

Booster vaccine
இன்று முதல் செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசி

கரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமும் இல்லாமல் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும். அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பொது வரிசை அல்லாது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.