தமிழக அரசின் பொதுநிவாரண நிதிக்காக ரூ.5 கோடி கொடுத்த சக்தி மசாலா நிறுவனம் !

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க மாநில முதல்வர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.மேலும் மே 24 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் நிதி அளித்து உதவ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.இதனை தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் ,நிறுவனங்கள் நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் புகழ் பெற்ற நிறுவனமான சக்தி மசாலா ரூ.5 கோடி கரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளது.மேலும் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுவதாக சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.