புதிய முதல்வர் திரத் சிங் ராவத் பதவியேற்பு – உத்தரகாண்ட் !

உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜக எம்பி தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திரத் சிங் ராவத் மக்களவை உறுப்பினராக உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு அவர் முதலமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று தான் உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஆளுநர் பேபி ராணி மவுரியாவை ராஜ் பவனில் சந்தித்து தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.அப்போது ராஜினாமா குறித்த கேள்விக்கு இது கட்சியின் முடிவு என்று கூறினார்.

பின்னர் ஊடகங்களிடையே உரையாற்றிய ராவத், உத்தரகண்ட் மக்களுக்கு நான்கு ஆண்டுகளாக சேவை செய்ய ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கிய கட்சிக்கு நன்றி தெரிவித்தார்.