முரசு சின்னம் கிடைத்த மகிழ்ச்சியில் தேமுதிக !

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு முரசு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்குமா அல்லது, தனித்து போட்டியிடுமா என்பது இன்னும் தெரியாத நிலையில் உள்ளது.அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில்,மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால், தங்கள் அழைப்பிற்கு தேமுதிக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ் கூறியுள்ளார்.இந்நிலையில் , முரசு சின்னத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடலாம் என்று தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.