சில நாட்களுக்கு காலை 1 மணி முதல் 3 மணி வரை யுபிஐ செயலிகள் இயங்காது!

யுபிஐ (ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு ) பயன்படுத்துபவர்களுக்கு ஒரு செய்தி.அடுத்த இரண்டு நாட்களுக்கு யுபிஐ காலை 1 மணி முதல் 3 மணி வரை செயல்படாது என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்,தனது ட்விட்டர் பக்கத்தில் ,யுபிஐ பரிவர்த்தனைகளின் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த கட்டமைப்பை உருவாக்க, யுபிஐ இயங்குதளம் அடுத்த சில நாட்களுக்கு 1AM – 3AM முதல் மேம்படுத்தல் செயல்பாட்டின் கீழ் இருக்கும்.

எனவே பயனர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடலாம், உங்கள் கட்டணங்களைத் திட்டமிடுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.