புதிய அதிபர் ஜோ பிடென் பதவியேற்ற முதல் நாளே அதிரடி உத்தரவுகள் பிறப்பித்தார் – அமெரிக்கா !

அமெரிக்காவின் புதிய அதிபராக நேற்று ஜோ பிடென் பதவி ஏற்றுக்கொண்டார்.மேலும் பதவி ஏற்ற முதல் நாளிலே அதிரடியாக 17 அணைகளில் கையெழுத்திட்டார் .

இந்த புதிய உத்தரவுகளின்படி, கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றுஅரசு அறிவித்துள்ளது.இந்த கொரோனாவை தொற்றை கட்டுப்படுத்த புதிய அலுவலகத்தையும் திறப்பதாக கூறியுள்ளது.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 12 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு மக்கள் வர விதிக்கப்பட்டிருந்த தடையையும் அதிரடியாக நீக்கப்பட்டு, விசா வழங்கும் பணிகளை மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும்,மெக்சிகோ – அமெரிக்கா இடையே தடுப்புச் சுவர் கட்டும் டிரம்ப் பிறப்பித்த நிதி அளிக்கும் பணியை பைடன் திரும்பப் பெற்றார்.உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் நல்லிணக்கம் ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார்.