வாடைக்கு விடப்படும் குண்டு மனிதர்கள்..!

100 கிலோவுக்கு மேல் எடை கொண்ட குண்டு மனிதர்களை வாடகைக்கு விடும் வினோத நிறுவனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

“Debucari” என்ற இந்த புதிய சேவை ஜப்பானில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 கிலோவுக்கும் மேலான மனிதர்களை தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ தங்களிடமிருந்து வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ள அந்நிறுவனத்தார் இதற்காக ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 2000 ஜப்பானிய யென்கள் கட்டணமாக தர வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

மேலும் இந்த விநோத சேவை குறித்து நிறுவனம் கூறுகையில், குண்டு மனிதர்களை எதற்காக வாடகைக்கு எடுக்க வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். உங்களை விட குண்டான மனிதரை பார்த்து உங்களை நீங்களே நன்றாக உணருவதற்கோ, எடை அதிகம் கொண்ட நண்பருக்கு ஆடை வாங்குவதற்காக செல்லும் போது அதனை உடுத்திப் பார்க்க ஒரு மாடல் தேவை என்றாலோ, டயட் பிளான் குறித்த விளம்பரங்களை எடுப்பதற்கான மாடல் தேவை என்றாலோ இப்படி பல காரணங்களுக்காக உங்களுக்கு குண்டு நபர்கள் தேவை எனும் போது எங்களை அனுகி சேவையை பெறலாம் என வித்தியாசமான கோணத்தில் பதில் தருகிறார் அதன் உரிமையாளர்.