மக்கள் கவத்திற்கு ரேஷன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம் !

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.இதனால் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் வழக்கமான நேரத்தை விட கூடுதல் நேரம் கடைகள் திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து நியாயவிலை கடைகளும் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 பொருட்கள் தொகுப்பு வரும் ஜூன் 15ம் தேதி முதல் விநியோகம் செய்ய ஜூன் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை பணியாளர்கள், பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று பிற்பகலில் டோக்கன் வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.