மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 வரவு வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தமிழகத்தைப் போலவே, மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில்அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், “விவசாயிகள் கவலைப்பட வேண்டாம். பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் உங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ.18,000 வரவு வைக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று அமித் ஷா கூறினார்.
மேலும், “கடந்த ஆண்டு நிலுவையில் இருந்த ரூ.6,000, இந்த ஆண்டின் ரூ.6,000 மற்றும் அடுத்த ஆண்டுக்கான ரூ.6,000 என மொத்தமாக ரூ.18,000 உதவித்தொகையை உங்களால் பெற முடியும்” என்றும் அமித் ஷா கூறினார்.