பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் !

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை அதிக அளவு தாக்கி வருகிறது.இதை கட்டுப்படுத்தவில்லை என்றால் இந்தியா மிக பெரிய அழிவை சந்திக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக தொற்று அதிகம் பரவும் மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

காலை 11 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.