பேப்பர் இல்லாத பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

இந்தியாவிலேயே முதல் முறையாக பேப்பர் இல்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.

இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செல்போன் செயலியில் பட்ஜெட் விபரங்களை உடனுக்குடன் பார்த்துக் கொள்ளலாம். வழக்கமாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தவுடன் அது தொடர்பான விவரங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புத்தக வடிவில் வழங்கப்படும்.

இதற்காக நூற்றுக்கணக்கில் பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் தயார் செய்யப்படும். பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக லாரிகளில் மூட்டைகளாக கட்டப்பட்டு இவை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதாலும், செலவை மிச்சப்படுத்துவது மற்றும் பேப்பர் பயன்பாட்டை குறைப்பதற்காகவும் இந்த வருடம் முதன்முதலாக பேப்பர் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.