பெங்களூரிலுள்ள பண்ணை வீட்டில் சசிகலா..!

இன்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்டார். மருத்துவமனை வாயிலில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.

கொரோனாவில் இருந்து குணமாகி விட்டாலும் ஒரு வாரம் தனிமைப்படுத்தலில் இருக்கும்படி மருத்துவர்கள் சசிகலாவை அறிவுறுத்தியுள்ளனர். அதனால் பெங்களூரிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் அவர் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அங்கு தங்கும் சசிகலா பிப்ரவரி 3-ம் தேதி அல்லது 5-ம் தேதி தமிழகம் திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.