பிரபல ஜூவல்லரி ஐடி சோதனையில் சிக்கிய 1,000 கோடி ரூபாய் !

தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஜூவல்லரி நிறுவனமான லலிதா ஜூவல்லரி மற்றும் சிவ் சாஹய் சன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 27 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மார்ச் 4ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையானது சென்னை, மும்பை, கோவை, மதுரை, திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

இந்த இரண்டு நிறுவனங்களின் சோதனை முடிவில் , 1000 கோடி ரூபாய்க்கு மேல் வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 1.2 கோடி ரூபாய் ரொக்கமாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.