இந்தியாவை பற்றி ஐநா தலைவர் புகழாரம் !

உலகில் கரோனா தொற்றுக்கு தடுப்பூசி தயாரிக்கும் மையமாக இந்தியா உள்ளது என கூறிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் கூறியுள்ளார்.

மேலும் உலக நாடுகளுக்கு கரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை வழங்கியதற்காக இந்தியாவைப் பாராட்டியுள்ளார்.இத்தகைய பரபரப்பான சூழலில் இந்தியா இந்த தொற்றுக்கு தடுப்பூசியை தயாரித்து உலக நாடுகளுக்கு கொடுப்பது பெரும் பாராட்டுக்கு உரியது.இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறன் இன்று உலகின் மிகப்பெரிய சொத்தாக இருக்க முடியும். இந்த சொத்தை நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதை உலகம் உணர வேண்டும்.

சர்வதேச அளவில் தடுப்பூசி பணிகளை சிறப்பாக நடத்துவதில் முக்கிய பங்கு வகிக்க தேவையான அனைத்து கருவிகளும் இந்தியாவிடம் இருக்கிறது என நம்புகிறோம் என கூறியுள்ளார்.