டெல்லியில் பரபரப்பு சூழல்.. இஸ்ரேல் தூதரகம் அருகில் குண்டுவெடிப்பு !

டெல்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரகம் அருகே குண்டு வெடித்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.மேலும் இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் காயம் அடைந்ததாக தெரியவந்துள்ளது. அங்கு இருந்த 4 கார்கள் சேதம் அடைந்தன. டெல்லியில் சாணக்யபுரி பகுதியில் இஸ்ரேல் நாட்டின் தூதரகம் அமைந்துள்ளது.

தூதரகத்தின் அருகே 40 முதல் 50 மீட்டர் தொலைவிலேயே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பானது.விபத்து ஏற்பட்ட பகுதிக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.