திமுக வன்னியர் சமுதாயத்தினருக்கு செய்த சாதனைகளை ராமதாஸ் மறைக்கிறார் – மு.க.ஸ்டாலின் !

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,வன்னியர் சமுதாயம் திமுக ஆட்சியில் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்க பட்டது.

மேலும் 20 % இடஒதுக்கீடும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு கிடைத்தது.இடஒதுக்கீடு கேட்டு போராடி உயிர் நீத்தவர்களுக்கு நிதிஉதவி வழங்கியது கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி தான்.

இந்நிலையில் திமுக வன்னியர் சமுதாயத்திற்கு செய்த சாதனைகளை மறைத்து ராமதாஸ் பொய் பிரசாரம் செய்கிறார் என கூறியுள்ளார்.