கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,வன்னியர் சமுதாயம் திமுக ஆட்சியில் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்க பட்டது.
மேலும் 20 % இடஒதுக்கீடும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு கிடைத்தது.இடஒதுக்கீடு கேட்டு போராடி உயிர் நீத்தவர்களுக்கு நிதிஉதவி வழங்கியது கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி தான்.
இந்நிலையில் திமுக வன்னியர் சமுதாயத்திற்கு செய்த சாதனைகளை மறைத்து ராமதாஸ் பொய் பிரசாரம் செய்கிறார் என கூறியுள்ளார்.