இந்தியாவுக்கு உதவி கரம் நீட்டும் போரிஸ் ஜான்சன் !

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்கி வருகிறது.மகாராஷ்டிரா,கர்நாடகா,டெல்லி மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா,டெல்லி,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கரோனாவின் 2வது அலையுடன் போராடிக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் எந்த வகையில் உதவி செய்யலாம் என பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.

இந்தியா எங்களின் சிறந்த நட்பு நாடு எனவும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார்.மேலும் தங்கள் உதவ தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.பிரிட்டனின் உதவியானது வெண்டிலேட்டர்கள் அல்லது சிகிச்சை தொடர்பானதாக இருக்கலாம் என பிரிட்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.