இளையோர் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு வெண்கலம் !

டோக்கியோவில் கடந்த மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.இதில் இந்தியா 7 பதக்கங்களுடன் 48 வது இடத்தை பிடித்துள்ளது.

தற்போது கென்யாவில் ஜூனியர் வீரர்,வீராங்கனைகளுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.இந்த போட்டியில் 20 வயதுக்குட்பட்டவர்கள் இந்தத் தொடரில் கலந்துகொள்வார்கள்.

நேற்று கலப்பு ரிலே 4*400மீ ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பரத் எஸ், பிரியா மோகன், சம்மி மற்றும் கபில் ஆகிய நால்வரும் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியின் முடிவில் 3.20.60 நொடிகளில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தனர். இதன்மூலம் நால்வரும் சேர்ந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.