அட கடவுளே.. இந்தியாவில் போலி தடுப்பூசிகள் விற்பனை !

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கொரோனா தொற்று இந்த உலகத்தை தன் வசமாக்கியுள்ளது.இந்த கொரோனா தொற்று சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியது.இந்த தொற்று பாதிப்பினால் பல லட்சம் உயிர்கள் இறந்துள்ளார்.

தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியாக இந்தியாவில் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் போலிகளை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளது.ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் போடப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகளில் சில போலியானவை என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2 மில்லி லிட்டர்,அதாவது நான்கு டோஸ்கள் கொண்ட கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் போலிகள் என கண்டறியப்பட்டுள்ளன.இதை சீரம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுவது,போலி கோவிஷீல்டு மருந்துகளை கண்டுபிடித்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.இது மனித உயிருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.