நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு !

மீரா மிதுன் இவர் விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்.சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசிவந்தார்.

சமீபத்தில் இவர் பட்டியலின மக்கள் குறித்து பேசியது கடும் சர்ச்சைக்குள்ளானது. இதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார்கள் எழுந்தன.

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அதில், தன்னை பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் மனஉளைச்சல் ஏற்பட்டு வாய் தவறி பட்டியலின சமுதாயத்தை பற்றி பேசியதாகவும், பிறகு தான் பேசியது தவறு என தெரிந்ததும், தான் பேசியது தவறு என தான் குறிப்பிட்டதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

மேலும் பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பித்துள்ளார்.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.