பெண் குழந்தையை விற்ற தந்தைக்கு போலீஸ் வலை

crime-father-arrested-for-setting-fire-on-own-son-family-with-house-in-kerala
மகன் குடும்பத்துக்கு தந்தை செய்த கொடூர செயல்

பெண் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த தந்தையை காவல் துறையினர் தேடி வருகின்றனர். குழந்தையை விற்க உதவிய பெண்ணையும், குழந்தையை வாங்கிய இளம்பெண்ணையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்றும் பெண் குழந்தையாக இருப்பதால், கடைசி பெண் குழந்தையை விற்றுவிடலாம் என்று விஜய் அவரது மனைவி சத்யாவை வற்புறுத்தி வந்தார். ஆனால், இதற்கு சத்யா ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன், விஜய் தன் மனைவிக்கு தெரியாமல் பிறந்து 15 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு ஈரோட்டைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மனைவி நிஷாவிற்கு விற்றுவிட்டார். இதையறிந்த சத்யா, கணவனுடன் தகராறு செய்துள்ளார். மேலும், அருகில் வசிப்பவர்களிடம் குழந்தையை மீட்க உதவி செய்யுமாறும் கேட்டுள்ளார்.

அப்போது, விஜய் கரிய பெருமாள் கரடு பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவரின் உதவியுடன் தனது குழந்தையை நிஷாவிடம் விற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து சேலம் அன்னதானப்பட்டி காவல் துறையினர் கோமதி, நிஷா ஆகியோரிடம் இன்று (டிசம்பர் 12) விசாரணை நடத்தினர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாகியுள்ள விஜயை தொடர்ந்து தேடி வருகின்றனர்.