கரோனா தடுப்பூசியை கண்டறிந்து அமெரிக்கா பெரும் சாதனை !

கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை 9 மாதங்களுக்குள்ளாகவே கண்டறிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்து மருத்துவ உலகில் சாதனை படைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அமெரிக்கா முழுவதும் கரோனா வைரஸிற்கான முதல் தடுப்பூசி 24 மணி நேரத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். சீனாவிலிருந்து வந்த இந்த தொற்றுநோய் அமெரிக்காவில் முடிவடையவுள்ளது.

இன்று நம் நாடு மருத்துவ உலகில் சாதனை படைத்துள்ளது. வெறும் ஒன்பது மாதங்களில் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியை மக்களுக்கு வழங்கியுள்ளோம். இது வரலாற்றில் மிகப்பெரிய அறிவியல் சாதனைகளில் ஒன்று. இது மில்லியன் கணக்கான மக்களைக் காப்பாற்றுவது மட்டுமின்றி, விரைவில் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரும்.

​​இ