பொங்கல் வாழ்த்து கூறிய – டிடிவி தினகரன் !

பொங்கல் பண்டிகைக்காக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மண்வாசனையோடு பொங்கல் திருநாளை மகிழ்ந்து கொண்டாடுகிற உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை 4 நாள்கள் விழாவாக அர்த்தமுள்ள வகையில் நம் முன்னோர் அமைத்திருக்கிறார்கள் பழையனவற்றை நீக்குவதற்கும் இயற்கையை வணங்குவதற்கும், உறவுகளையும் நட்பையும் பேணி மகிழ்வதற்குமான பொங்கல் பண்டிகை, தமிழர்களின் சிறப்பைஉலகிற்கு சொல்லும் திருநாளாக இருக்கிறது.

நம் வாழ்விற்கு அடிப்படையான விவசாயம் தொழில் அல்ல,நமது வாழ்க்கை முறை என்பதை மனதில் கொண்டு உழவையும், உழவர்களையும் அவர்களுக்கு உற்றத் துணையாக உள்ள உயிர்களையும் கொண்டாடுவோம் என வாழ்த்தியுள்ளார்.