சசிகலா காரில் அதிமுக கொடியும் டிடிவி தினகரன் விளக்கமும் !

உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்ட சசிகலா தற்போது நலமாக உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புறப்பட்ட சசிக்கலா அதிமுக கொடி முகப்பில் பொருத்தப்பட்டிருந்த காரில் பயணித்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சசிக்கலா காரில் அதிமுக கொடியை பொருத்தி கொள்ள அவருக்கு உரிமையில்லை என அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து டிடிவி தினகரன் கூறியது அதிமுக கட்சி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிமுக பொதுசெயலாளராக சசிகலாதான் உள்ளார்.

அதனால்தான் அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.சசிகலா 7 நாள் ஓய்விற்கு பிறகு சென்னை திரும்புவார் என்று கூறினார்.