வரும் 8ஆம் தேதி சசிகலா தமிழகம் வருகை

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், சசிகலா வரும் 8-ம் தேதிகாலை பெங்களூருவில் இருந்துபுறப்பட்டு தமிழகம் வருகிறார்.

அன்றைய தினம் அவருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். இந்த வரவேற்பால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் நேராமல் ஆதரவாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசியின் தண்டனைக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.