டொனால்ட் ட்ரம்பின் சமூக வலைதள பதிவுகள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. மேலும் அது வன்முறையை தூண்டும் விதமாக அமைந்து விடுகிறது. இதனைத் தடுக்கும் விதமாக பேஸ்புக் நிறுவனம் தங்களின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களில் ட்ரம்ப் தொடர்ந்து செயல்பட காலவரையின்றி தடைவிதித்துள்ளது.
அதேபோல ட்விட்டர் நிறுவனமும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ட்ரம்பின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியுள்ளதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்படும் பதிவுகளின் சமநிலையை கடைபிடிக்கவும், வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்துகள் பதிவிடுவதைத் தவிர்க்கவும், நிறுவனங்கள் பெரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரின் வெற்றி செல்லாது என வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்டுவந்தார்.தொடர்ந்து பலமுறை அவரது சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.