மருத்துவமனையில் தீ விபத்து -மகாராஷ்டிரா !

மகாராஷ்டிராவில் பண்டாரா மாவட்டத்திலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக, 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 7 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பிரிவிலிருந்த 7 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.