போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது !

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பேருந்துகள் சரிவர இயக்கவில்லை .இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

இதனால் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நல ஆணையம் அழைப்புவிடுத்திருந்தது.

இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமி காந்தன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதிய ஒப்பந்த பேச்சுவாரத்தை தொடர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதனால் வேலை நிறுத்தம் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.