மக்கள் கவனத்திற்கு ..ரயில்கள் இயங்கும் !

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.பெரு மழை காரணமாக சென்னை பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி வெளுத்தது. சென்னையில் இயல்பைவிட கூடுதல் மழை பதிவாகி உள்ளது.

தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் எழும்பூர், வியாசர்பாடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார ரயில் தாமதமாகவும், ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவித்துள்ளது.