அட இது நம்ம மெரினாவா..கறுப்பாக மாறிய மெரினா !

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.பெரு மழை காரணமாக சென்னை பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடலின் நிறம் கறுப்பாக மாறியுள்ளது .சமூக ஆர்வலர்களை அச்சமடையச் செய்துள்ள​து.

சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறு வழியாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சாக்கடைக் கழிவுகள் மற்றும் சாலைகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளும் மழை நீரில் அடித்துச் சென்று கால்வாய் வழியாக கடலில் கலந்தன

இதனால் வங்கக்கடல் நீரானது நீல நிறத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பு நிறத்திற்கு மாறியுள்ளது.