சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல 2 நாட்கள் தடை !

கொரோனா தொற்றின் 2 ம் அலை காரணமாக தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை பரவியது.இதனை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்தது.

இந்த ஊரடங்கில் கட்டுக்குள் வந்த தொற்று தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

வார விடுமுறை என்பதால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முயன்றனர்.அப்போது போலீசார் சோதனை சாவடி அமைத்து தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினார்.தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இரண்டு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.