என்னடா இது ..பேய் படத்தில் வருவது போல் வானம் முழுவதும் கருமேகங்கள் !

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இன்று சென்னையின் அடையாறு, பல்லாவரம், கோட்டூர்புரம் உள்ளிட்ட கனமழை பெய்து வருகிறது. இது மேலும் சில மணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மாலை நேரத்தில் படத்தில் வருவது போல வானம் முழுவது கருமேகங்கள் சூழ்ந்து இருள் போல காட்சியளித்தது . சேப்பாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், மீனம்பாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு, பல்லாவரம், கோட்டூர்புரம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

மேலும் கருமேகங்கள் அங்கு நிறைய சூழ்ந்ததால் பயணிக்கும் பயணிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்தன .