மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் !

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச்லைட் சின்னம் தரும்படி , தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளரான, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஏ.ஜி.மவுரியா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மையத்திற்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் , கமல் தனது டுவிட்டரில், ஒதுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளி பாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்த நாளில் இது நிகழ்ந்திருக்கிறது ,இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு இருப்பவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.