இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் !

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இன்று வெண்கல பதக்கத்திற்கான 65 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, கஜகஸ்தான் நாட்டின் டேவ்லெட் நியாஸ்போகோ ஆகியோர் மோதினர்.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் பஜ்ரங் முன்னிலை பெற்ற நிலையில், இறுதியில் வெண்கல பதக்கத்தைத் வென்றுள்ளார்.மேலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2 வெள்ளி, 4 வெண்கலம் என 6 பதக்கங்கள் கிடைத்துள்ளது.