பிரபல பாலிவுட் நடிகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் !

மும்பையில் உள்ள மூன்று முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சனின் பங்களாவுக்கு போன்ற இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினருக்கு அழைப்பு வந்துள்ளது.

இதனை கொண்டு அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் தேடுதல் வேட்டையில் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

மும்பை காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது.மேலும் அதில் சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (சிஎஸ்எம்டி), பைகுல்லா, தாதர் ரயில் நிலையங்கள் மற்றும் ஜுஹுவில் உள்ள நடிகர் அமிதாப் பச்சனின் பங்களாவில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்தவுடன் காவல்துறை, ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் குழு, இந்த இடங்களுக்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இறுதியில் சந்தேகத்திற்கிடமான எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.