சூப்பர்..இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் !

டோக்கியோவில் 2020 ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் ஆதிகம் செலுத்தி வருகிறது.மேலும் பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில், பெண்களுக்கான வெல்டர் (64-69 கிலோ) பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் 2ஆவது காலிறுதியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் சீன தைஃபேயின் நின்-சின்-சென்னை எதிர்கொண்டார்.

இதில் லோவ்லினா 4:1 (30-27, 29-28, 28-29, 30-27, 30-27) என அசத்தல் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு உறுதியாகியுள்ளது.